பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - பொதுத்தமிழ் - TNPSC Group - II


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கான பொதுத்தமிழ் தாளின் பாடத்திட்டத்தில் முதல் தலைப்பாக பொருத்துதல் (பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் ) இடம் பெற்றுள்ளது. அதற்கான பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - TNPSC Group - II

  1. ஈரம் - அன்பு
  2. அளைஇ - கலந்து
  3. படிறு - வஞ்சம்
  4. செம்பொருள் - மெய்ப்பொருள்
  5. அகன் - அகம், உள்ளம்
  6. அமர் - விருப்பம்
  7. அமர்ந்து - விரும்பி
  8. முகன் - முகம்
  9. இன்சொல் - இனியசொல்
  10. இன்சொலன் - இனிய சொற்களைப் பேசுபவன்.
  11. அமர்ந்து - விரும்பி
  12. அகத்தான் ஆம் - உள்ளம் கலந்து
  13. இன்சொலினிதே - இனிய சொற்களைப் பேசுதலே.
  14. துன்புறூஉம் - துன்பம் தரும்
  15. துவ்வாமை - வறுமை
  16. யார் மாட்டும் - எல்லாரிடமும்
  17. இன்புறூஉம் - இன்பம் தரும்
  18. ஒருவற்கு - ஒருவனுக்கு
  19. அணி - அழகுக்காக அணியும் நகைகள்.
  20. அல்லவை - பாவம்
  21. நாடி - விரும்பி.
  22. நயன்ஈன்று - நல்ல பயன்களைத் தந்து
  23. நன்றி - நன்மை
  24. பயக்கும் - கொடுக்கும்
  25. தலைப்பிரியாச் சொல் - நீங்காத சொற்கள்.
  26. சிறுமை - துன்பம்
  27. மறுமை - மறுபிறவி
  28. இம்மை - இப்பிறவி.
  29. இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
  30. ஈன்றல் - தருதல், உண்டாக்குதல்;
  31. வன்சொல் - கடுஞ்சொல்
  32. எவன்கொலோ - ஏனோ?
  33. கவர்தல் - நுகர்தல்
  34. அற்று - அதுபோன்றது.
  35. இரட்சித்தானா? - காப்பாற்றினானா?
  36. அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
  37. ஆரைத்தான் - யாரைத்தான்
  38. பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
  39. புவி - உலகம்
  40. குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்புநோய்
  41. குரைகடல் - ஒலிக்கும் கடல்
  42. பரங்குன்றுளான் - திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன்
  43. வானரங்கள் - இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது
  44. மந்தி - பெண் குரங்கு
  45. வான்கவிகள் - தேவர்கள்
  46. கமனசித்தர் - வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்
  47. காயசித்தி - மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை
  48. பரிக்கால் - குதிரைக்கால்
  49. கூனல் - வளைந்த
  50. வேணி - சடை
  51. மின்னார் - பெண்கள்
  52. மருங்கு - இடை
  53. சூல்உளை - கருவைத்தாங்கும் துன்பம்.
  54. கோட்டு மரம் - கிளைகளை உடைய மரம்
  55. பீற்றல் குடை - பிய்ந்த குடை
  56. வானப்புனல் - மழைநீர்
  57. வையத்து அமுது - உலகின் அமுதம்
  58. வையம் - உலகம்
  59. தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
  60. பொடி - மகரந்தப் பொடி
  61. தழை - செடி
  62. தழையா வெப்பம் - பெருகும் வெப்பம்; குறையாத வெப்பம் எனவும் பொருள் கொள்ளலாம்
  63. தழைக்கவும் - குறையவும்.
  64. ஆற்றவும் - நிறைவாக
  65. தமவேயாம் - தம்முடைய நாடுகளே
  66. ஆற்றுணா -ஆறு + உணா; ஆறு - வழி; உணா - உணவு. வழிநடை உணவு.
  67. இதனைக் கட்டுச்சோறுஎன இக்காலத்தில் கூறுவர்.
  68. வெய்யவினை - துன்பம் தரும் செயல்
  69. வேம்பு - கசப்பான சொற்கள்
  70. வீறாப்பு - இறுமாப்பு
  71. பலரில் - பலர் + இல், பலருடைய வீடுகள்
  72. புகலல் ஒண்ணாதே – செல்லாதே
  73. நாடாகு ஒன்றோ - நாடாக இருந்தால் என்ன அல்லது ... எனத் தொடரும்.
  74. அவல் - பள்ளம்
  75. மிசை - மேடு
  76. ஆடவர் - ஆண்கள்
  77. நல்லை - நல்லதாக இருக்கிறாய்.
  78. பண் - இசை
  79. வண்மை - கொடைத்தன்மை
  80. போற்றி - வாழ்த்துகிறேன்.
  81. புரை - குற்றம்
  82. பயக்கும் - தரும்.
  83. சுடும் - வருத்தும்.
  84. அன்ன - அவை போல்வன
  85. எய்யாமை - வருந்தாமை.
  86. அகம் - உள்ளம்
  87. அமையும் - உண்டாகும்.
  88. அறிகை - அறிதல் வேண்டும்
  89. தானை - படை
  90. கடனே - கடமை.
  91. ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
  92. காதல் - அன்பு, விருப்பம்
  93. மேதை - அறிவு நுட்பம்
  94. வண்மை - ஈகை, கொடை
  95. பிணி - நோய்
  96. மெய் - உடம்பு
  97. நாணம் - செய்யக் கூடாததனைச் செய்ய அச்சப்படுதல்
  98. சிறந்தன்று - சிறந்தது
  99. வழிபடுதல் - போற்றி வணங்குதல்.
  100. சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
  101. துன்னலர் - பகைவர், அழகிய மலர்
  102. பரிவாய் - அன்பாய்
  103. சாடும் - தாக்கும், இழுக்கும்
  104. ஆடுபரி - ஆடுகின்ற குதிரை.
  105. மெத்த - மிகுதியாக
  106. பந்தயம் - போட்டி
  107. புலவீர் - புலவர்களே
  108. கலைமடந்தை - கலைமகள்.
  109. உண்பொழுது - உண்ணும்பொழுது
  110. பெறினும் - பெற்றாலும்
  111. பால்பற்றி - ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில் இருந்து மாறுதல்)
  112. தோல்வற்றி - தோல்சுருங்கி
  113. சாயினும் - அழியினும்
  114. சான்றாண்மை - அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்
  115. குன்றாமை - குறையாது இருத்தல்
  116. தூஉயம் - தூய்மை உடையோர்
  117. ஈயும் - அளிக்கும்
  118. நில்லாமை - நிலையாமை
  119. நெறி - வழி
  120. தூய்மை - தூய தன்மை
  121. மாந்தர் - மக்கள்.
  122. நிறை ஒழுக்கம் - மேலான ஒழுக்கம்
  123. தேற்றாதான் - கடைப்பிடிக்காதவன்
  124. வனப்பு - அழகு
  125. தூறு - புதர்
  126. வித்து - விதை.
  127. என்பணிந்த (என்பு + அணிந்த) - எலும்பை மாலையாக அணிந்த
  128. தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
  129. பூங்கோயில் - திருவாரூர்க்கோவிலின் பெயர்
  130. புண்ணியனார் - இறைவர்
  131. மண் சுமந்தார் - வந்தி என்னும் கிழவிக்காக இறைவன் மண் சுமந்தார்
  132. உருகுவார் - வருந்துவார்.
  133. ப து மை - உ ரு வ ம்
  134. மெய்ப்பொருள் - நிலையான பொருள்
  135. கணக்காயர் - ஆசிரியர்.
  136. மாரி - மழை
  137. சேமம் - நலம்
  138. தேசம் - நாடு
  139. முட்டு - குவியல்
  140. நெத்தி - நெற்றி
  141. திரு - செல்வம்
  142. நிவேதனம் - படையலமுது
  143. கனகம் - பொன்
  144. புரவி - குதிரை
  145. கோ - அரசன்
  146. கடுகி - விரைந்து.
  147. மேழி - கலப்பை, ஏர்
  148. வேந்தர் - மன்னர்
  149. ஆழி - மோதிரம்
  150. சூழ்வினை - உண்டாகும்
  151. கசடு - குற்றம்
  152. எண் - எண்கள், கணக்கு
  153. எழுத்து - இலக்கண இலக்கியங்கள் (வரிவடிவம்)
  154. உவப்ப - மகிழ
  155. தலைக்கூடி - ஒன்றுசேர்ந்து.
  156. உடையார் - செல்வர்
  157. இல்லார் - ஏழை
  158. ஏக்கற்று - கவலைப்பட்டு
  159. கடையர் - தாழ்ந்தவர்.
  160. தொட்டனைத்து - தோண்டும் அளவு
  161. மாந்தர் - மக்கள்.
  162. சாந்துணையும் - சாகும் வரையிலும்.
  163. ஏமாப்பு - பாதுகாப்பு.
  164. காமுறுவர் - விரும்புவர்.
  165. விழுச்செல்வம் - சிறந்த செல்வம்
  166. மாடு - செல்வம்.
  167. தத்தும் புனல் - தத்திச்செல்லும் நீர்
  168. முத்தம் அடைக்கும் - முத்துகள் மிக்குப் பெருகி இடையே அடைத்துக்கொண்டு கிடக்கும்
  169. கலிப்புவேலை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
  170. சித்ரம் - சிறப்பான காட்சிகள்
  171. மதோன்மத்தர் - பெரும்பித்தனாகிய சிவபெருமான்.
  172. கதி - துணை
  173. பேறு - செல்வம்
  174. நனி - மிகுதி ( மிக்க )
  175. தரம் - தகுதி
  176. புவி - உலகம்.
  177. விண் - வானம்
  178. வரை - மலை
  179. முழவு - மத்தளம்
  180. மதுகரம் - தேன் உண்ணும் வண்டு.
  181. மது - தேன்
  182. தியங்கி - மயங்கி
  183. சம்பு - நாவல்
  184. மதியம் - நிலவு.
  185. வாய்மை - உண்மை
  186. களையும் - நீக்கும்
  187. வண்மை - வள்ளல் தன்மை
  188. துலங்குதல் - விளங்குதல்
  189. சேய்மை - தொலைவு
  190. தவம் - பெரும்பேறு.
  191. திடம் - உறுதி
  192. மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு
  193. உபாயம் - வழிவகை.
  194. நகை- புன்னகை
  195. முகை - மொட்டு
  196. மேனி - உடல்.
  197. தாது - மகரந்தம்
  198. போது - மலர்
  199. பொய்கை - குளம்
  200. பூகம் - கமுகம் (பாக்கு மரம்).
  201. திறல் - வலிமை
  202. மறவர் - வீரர்.
  203. வழக்கு - நன்னெறி.
  204. ஆன்ற - உயர்ந்த.
  205. நயன் - நேர்மை
  206. நன்றி - உதவி.
  207. நகையுள்ளும் - விளையாட்டாகவும்
  208. பாடறிவார் - நெறியுடையார்.
  209. மாய்வது -அழிவது.
  210. அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி.
  211. நண்பு - நட்பு
  212. நயம்இல - தீங்கு, இனிமையற்ற
  213. கடை - இழிவு.
  214. நகல்வல்லர் - சிரித்து மகிழ்பவர்
  215. மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்.
  216. திரிந்தற்று - திரிந்ததுபோன்றது.
  217. நகையுள்ளும் - விளையாட்டாகவும்
  218. பாடறிவார் - நெறியுடையார்.
  219. பசியறாது - பசித்துயர் நீங்காது
  220. அயர்ந்த - களைப்புற்ற
  221. நீடிய - தீராத.
  222. வான்பெற்ற நதி - கங்கையாறு
  223. துழாய் அலங்கல் - துளசிமாலை;
  224. களபம் - சந்தனம்
  225. புயம் - தோள்
  226. தைவந்து - தொட்டுத்தடவி
  227. ஊன் - தசை
  228. பகழி - அம்பு
  229. நாமம் - பெயர்
  230. இருநிலம் - பெரிய உலகம்.
  231. கைம்மாறு - பயன்
  232. மாசற்ற - குற்றமற்ற
  233. தேட்டையிட - செல்வம் திரட்ட
  234. மீட்சி - மேன்மை
  235. மாள - நீங்க.
  236. மதி - அறிவு
  237. அமுதகிரணம் - குளிர்ச்சியான ஒளி
  238. உதயம் - கதிரவன்
  239. மதுரம் - இனிமை
  240. நறவம் - தேன்
  241. கழுவு துகளர் - குற்றமற்றவர்
  242. சலதி - கடல்
  243. அலகு இல் - அளவில்லாத
  244. புவனம் - உலகம்
  245. மதலை - குழந்தை
  246. பருதிபுரி - கதிரவன் வழிபட்ட இடம் (வைத்தீசுவரன் கோவில்).
  247. சுடர் - ஒளி
  248. ஆனந்தம் - மகிழ்ச்சி
  249. பராபரம் - மேலான பொருள், இறைவன்
  250. சலவர் - வஞ்சகர்
  251. மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
  252. குழவி - குழந்தை
  253. பிணி - நோய்
  254. கழறும் - பேசும்
  255. மயரி -மயக்கம்
  256. வள்ளை - நெல் குத்தும் போது பெண்களால் பாடப்படும் உலக்கை பாட்டு, ஒரு வகை நீர்க்கொடி
  257. அளகு - கோழி
  258. ஆழி - கடல், மோதிரம்
  259. வடிஅம்பு - வடிக்கப்பட்ட அம்பு
  260. விசும்பு - வானம்
  261. செற்றான் - வென்றான்
  262. அரவு - பாம்பு
  263. பிள்ளைக் குருகு - நாரைக் குஞ்சு
  264. கடா - எருமை
  265. வௌவி - கவ்வி
  266. சங்கின் பிள்ளை - சங்கு குஞ்சுகள்
  267. கொடி - பவளக் கொடி
  268. கோடு - கொம்பு
  269. கழி - உப்பங்கழி
  270. திரை -அலை
  271. மேதி -எருமை
  272. கள் - தேன்
  273. புள் - அன்னம் (பறவை)
  274. சேடி - தோழி
  275. ஈரிருவர் - நால்வர்
  276. ஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்
  277. செம்மை சேர் - புகழ்மிகு
  278. கடிமாலை - மணமாலை
  279. சூழ்விதி - நல்வினை
  280. தார் - மாலை
  281. காசினி - நிலம்
  282. நன்னுதல் - அழகிய நெற்றி
  283. வெள்கி - நாணி
  284. களிகூர - மகிழ்ச்சி பொங்க
  285. வயவேந்து - வெற்றிவேந்தன்
  286. ஒண்தாரை - ஒளிமிக்க மலர் மாலை
  287. மல்லல் - வளம்
  288. மடநாகு - இளைய பசு
  289. மழவிடை - இளம் காளை
  290. செம்மாந்து - பெருமிதத்துடன்
  291. மறுகு - அரச வீதி
  292. உளவாக்கல் - உண்டாக்குதல் (படைத்தல்)
  293. நிலைபெறுத்தல் - காத்தல்
  294. நீக்கல் - அழித்தல்
  295. நீங்கலா - இடைவிடாது
  296. அலகிலா- அளவற்ற
  297. அன்னவர் - அத்தகைய இறைவர்
  298. தலைவர் - இறைவர்
  299. சரண் - அடைக்கலம்.
  300. அகழ்வாரை - தோண்டுபவரை
  301. இகழ்வார் - இழிவுபடுத்துவோர்
  302. தலை - சிறந்த பண்பு.
  303. பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
  304. இறப்பினை - பிறர் செய்த துன்பத்தை.
  305. இன்மை - வறுமை
  306. ஒரால் - தவிர்த்தல்
  307. மடவார்-அறிவற்றார்.
  308. நிறை - சால்பு.
  309. ஒறுத்தாரை - தண்டித்தவரை
  310. ஒன்றாக - ஒரு பொருட்டாக
  311. பொதிந்து வைப்பர் - (மனத்துள்) வைத்துக்கொள்வர்.
  312. பொன்றும் துணையும் - உலகம் உள்ளவரை.
  313. திறனல்ல - செய்யத்தகாத
  314. நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி.
  315. திறனல்ல - செய்யத்தகாத
  316. நோநொந்து - துன்பத்துக்கு வருந்தி.
  317. மிகுதியான் - மனச்செருக்கால்
  318. மிக்கவை – தீமை
  319. தகுதியான் - பொறுமையால்
  320. துறந்தார் - பற்றினை விட்டவர்
  321. இறந்தார் - வரம்பு கடந்தவர்
  322. இன்னா - தீய
  323. நோற்கிற்பவர் - பொறுப்பவர்.
  324. நோற்பார் - நோன்பு மேற்கொள்பவர்
  325. இன்னாச்சொல் - தீய சொல்.
  326. கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
  327. எண்வனப்பு - ஆரய்ச்சிக்கு அழகு
  328. வனப்பு - அழகு
  329. கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
  330. வாட்டான் - வருத்த மாட்டான்.
  331. அடவி - காடு
  332. தடந்தோள் - வலியதோள்
  333. மணிநகர் - அழகிய நகரம்
  334. மருங்கு - பக்கம்.
  335. கோலமுறு - அழகுமிக்க
  336. செறிந்து - அடர்ந்து
  337. கா - காடு
  338. குலவு - விளங்கும்
  339. ஞாலம் - உலகம்
  340. பண்ணவர் - தேவர்.
  341. அரம்பையர் - தேவமகளிர்
  342. ஞானம் - அறிவு
  343. புன்மை - நெறி பிறழ்ந்தசெயல்கள்
  344. வீ று - வ லிமை
  345. மதுரமொழி - இனிய மொழி
  346. குசலங்கள் பேசி - நலன் கேட்டு.
  347. உ ய் ய - பி ழை க் க
  348. இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
  349. தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்;
  350. இன்னல் - துன்பம்
  351. நல்கினார் - அளித்தார்
  352. இறைஞ்சி - பணிந்து.
  353. அ ள க் கி ல் கே ள் வியார் - அள வ ற் ற நூ ல றி வி ன ர்
  354. சி ர ம் துளக்கி - தலையசைத்து
  355. மீனவன்- மீன்கொடியை உடைய பாண்டியன்.
  356. விபுதர் - புலவர்
  357. தூங்கிய - தொங்கிய
  358. பொற்கிழி - பொன்முடிப்பு
  359. நம்பி - தருமி
  360. புறம்பு - வெளியில்.
  361. பையுள் - வருத்தம்
  362. பனவன் - அந்தணன்
  363. கண்டம் - கழுத்து
  364. வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்.
  365. ஆர்அவை - (புலவர்கள்) நிறைந்த அவை
  366. கிளத்தினேன் - சொன்னேன்
  367. சீரணி - புகழ் வாய்ந்த.
  368. வேணி - செஞ்சடை
  369. ஓரான் - உணரான்
  370. அற்குற்ற (அல்கு+உற்ற) - இருளையொத்த
  371. நாற்றம் - நறுமணம்
  372. குழல் - கூந்தல்
  373. அல்கு - இரவு.
  374. ஏத்தும் - வணங்கும்
  375. அரவுநீர்ச் சடையார் - சிவபெருமான்
  376. ஞானப்பூங்கோதை - உமையம்மை
  377. வெருவிலான் - அச்சமற்ற நக்கீரன்
  378. சலம் - மன உறுதி.
  379. கற்றைவார் சடையான் - சிவபெருமான்
  380. உம்பரார் பதி - தேவர்தலைவன் (இந்திரன்).
  381. நுதல்விழி - நெற்றிக்கண்
  382. பொற்பங்கயத்தடம் - பொற்றாமரைக் குளம்
  383. நாவலன் - புலவர்
  384. கரந்தான் - மறைந்தான்.
  385. செவிச்செல்வம் - கேள்விச்செல்வம்
  386. தலை - முதன்மை.
  387. போழ்து - பொழுது
  388. ஈயப்படும் - அளிக்கப்படும்.
  389. அவி உணவு - தேவர்களுக்கு வேள்வியின்பொழுது கொடுக்கப்படும்
  390. உணவு.
  391. ஆன்றோர் - கல்வி, கேள்வி, பண்பு ஆகியவற்றில் சிறந்தோர்
  392. ஒப்பர் - ஒப்பாவர்.
  393. ஒற்கம் - தளர்ச்சி.
  394. ஊற்றுக்கோல் - ஊன்றுகோல்
  395. அற்றே - போன்றதே.
  396. எனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்
  397. அனைத்தானும் - கேட்ட அளவிற்கு
  398. ஆன்ற - நிறைந்த.
  399. பிழைத்துணர்ந்தும் - த வ ற h க உ ண ர் ந் தி ரு ந் த h லு ம்
  400. பேதைமை - அறியாமையின்பாற்பட்ட தீயசொற்கள்
  401. இழைத்துணர்ந்து - நுட்பமாக ஆராய்ந்து
  402. ஈண்டிய - ஆய்ந்தறிந்த.
  403. தகையவே - தன்மையதே
  404. தோட்கப்படாத - துளைக்கப்படாத.
  405. நுணங்கிய - நுட்பமாகிய
  406. வணங்கிய - பணிவான
  407. வாயுணர்வின் மாக்கள் - வாய்ச்சுவை மட்டுமே அறிந்தோர்
  408. அவியினும் - இறந்தாலும்.
  409. இசைபட - புகழுடன்
  410. கயவர் - கீழ்க்குணமுடையோர்.
  411. உய்ம்மின் - பிழைத்துக்கொள்ளுங்கள்
  412. மல்லல் - வளமை
  413. வள் - நெருக்கம்
  414. விசும்பு - வானம்.
  415. புறவு - புறா
  416. நிறை - எடை
  417. ஈர்த்து - அறுத்து
  418. துலை - துலாக்கோல் (தராசு)
  419. நிறை - ஒழுக்கம்
  420. வன்கண்- வீரத்தன்மை
  421. மேனி - உடல்.
  422. மருப்பு - தந்தம்
  423. ஊசி - எழுத்தாணி
  424. மறம் - வீரம்
  425. கனல் - நெருப்பு
  426. திருத்தக்க - செல்வம் நிலைத்த
  427. வையகம் - உலகம்
  428. மொய்யிலை - நெருங்கியமைந்த இலை
  429. மாறன் - பாண்டிய மன்னன்
  430. களிறு - ஆண் யானை.
  431. தீயின்வாய் - நெருப்பில்
  432. சிந்தை - எண்ணம்
  433. கூர - மிக
  434. நவ்வி - மான்.
  435. முகில் - மேகம்
  436. மதி - நிலவு
  437. உகு - சொரிந்த (பொழிந்த);
  438. புனல் - நீர்.
  439. பகர்வது - சொல்வது
  440. தெளிவீரே - தெளியுங்கள்.
  441. துவ்வா - நுகராத
  442. அகன்று - விலகி.
  443. ஆழி - கடல்.
  444. ஆயம் - தோழியர் கூட்டம்.
  445. ஆசனம் - இருக்கை.
  446. நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
  447. யாக்கை - உடம்பு
  448. பிணிநோய் - நீங்கா நோய்.
  449. பேதைமை - அறியாமை
  450. செய்கை - இருவினை
  451. உணர்வு - அறிவியல் சிந்தனை
  452. அரு - உருவமற்றது
  453. உரு - வடிவம்
  454. வாயில் - ஐம்பொறிகள்
  455. ஊறு - புலன்களின் இயல்பு
  456. நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
  457. வேட்கை - விருப்பம்
  458. பவம் - பயன் நோக்கிய செயல்
  459. தோற்றம் - பிறப்பு.
  460. பெரும்பேறு - வீடுபேறு
  461. கோடு - கொம்பு.
  462. அலகில - அளவற்ற
  463. தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி.
  464. களவு - திருட்டு
  465. காமத்தீ - காமமெனும் கொடிய விருப்பம்
  466. உலையா உடம்பு - தளராத உடல்
  467. குறளை - புறம்பேசுதல்.
  468. வெஃகல் - பெருவிருப்பம்
  469. வெகுளல் -கடுஞ்சினம் கொள்ளுதல்
  470. பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்.
  471. சீலம் - ஒழுக்கம்
  472. தானம் - கொடை.
  473. புரைதீர் - குற்றம் நீங்கிய
  474. கேண்மின் - கேளுங்கள்
  475. முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு.
  476. உய்ம்மின் - போற்றுங்கள், நற்கதியடையுங்கள்
  477. உறைதல் - தங்குதல்
  478. கூற்று - எமன்
  479. மாசில் - குற்றமற்ற
  480. தொழுது - வணங்கி
  481. புக்கு - புகுந்து
  482. இடர் - இன்னல்.
  483. கடன் - கடமை.
  484. சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்.
  485. நாண் - நாணம்
  486. ஒப்புரவு - உதவுதல்
  487. கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
  488. வாய்மை - உண்மை.
  489. சால்பு - சான்றாண்மை.
  490. ஆற்றுவார் - செயல் செய்பவர்
  491. ஆற்றல் - வலிமை
  492. மாற்றார் - பகைவர்.
  493. துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்
  494. கட்டளை - உரைகல்.
  495. இன்னா - தீங்கு
  496. இனிய - நன்மை
  497. செய்யாக்கால் - செய்யாவிடத்து.
  498. இன்மை - வறுமை
  499. இளிவன்று - இழிவானதன்று
  500. திண்மை - வலிமை.
  501. ஊழி - உலகம்
  502. ஆழி - கடல்.
  503. இருநிலம் - பெரிய நிலம்
  504. பொறை - சுமை.
  505. உறுதி - உள உறுதி
  506. சகிப்புத்தன்மை - பொறுத்துக்கொள்ளுதல்
  507. சொரூபம் - வடிவம்
  508. தரணி - உலகம்
  509. தாரம் - மனையாள்
  510. சேவை - தொண்டு
  511. அயலார் - உறவல்லாதோர்.
  512. ஈண்டு - இவ்விடம்
  513. புகல்வது - சொல்வது
  514. காண்டகு - காணத்தக்க
  515. இருப்பாணி - இரும்பு ஆணி
  516. கடாவினார் - அடித்தார்
  517. கீண்டு - தோண்டி.
  518. செற்றம் - சினம்
  519. குருசு - சிலுவை
  520. சொற்ற - சொன்ன
  521. துளக்கம் - விளக்கம்
  522. சுருதிமுதல் - மறை முதல்வராகிய இயேசுநாதர்.
  523. சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு
  524. பன்னரிய - சொல்லுதற்கரிய
  525. பலபாடு - பல துன்பம்.
  526. இரும்பொறை - பெரும்பொறுமை
  527. வித்தகன் - ஆண்டவன்
  528. தொழும்பர் - அடியார்
  529. இசைபெறுதல் - புகழ்பெறுதல்
  530. துஞ்சினவர் - உறங்கியவர்.
  531. கீண்டு -பிளந்து
  532. இருப்புமுளை - ஆணியின் நுனி
  533. வதைப்புண்டு -துன்பமடைந்து
  534. மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்
  535. இரட்சகர் - காப்பவர்.
  536. மன்றாடும் - மிக வேண்டுதல்
  537. ஆகடியம் - ஏளனம்.
  538. நிழற்றிய - நிழல் செய்த
  539. நடுநாள் யாமம் - நள்ளிரவு
  540. துஞ்சான் - துயிலான்
  541. மா - விலங்கு
  542. கல்லா - கல்வியறிவில்லாத
  543. நாழி - அளவுப்பெயர்
  544. ஈதல் - கொடுத்தல்
  545. துய்ப்பேம் - நுகர்வோம்
  546. தப்புந - இழக்க
  547. நீர் - கடல்
  548. கருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு
  549. உயர்ந்தன்று - உயர்ந்தது
  550. அளவின்று - அளவினையுடையது
  551. மெய் - உடல்
  552. விதிர்விதிர்த்து - உடல் சிலிர்த்து
  553. விரை - மணம்
  554. நெகிழ - தளர
  555. ததும்பி - பெருகி
  556. கழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
  557. சயசய - வெல்க வெல்க
  558. விழும்பம் - சிறப்பு
  559. ஓம்பப்படும் - காத்தல் வேண்டும்
  560. பரிந்து - விரும்பி
  561. தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும்
  562. குடிமை - உயர் குடி
  563. இழுக்கம் - ஒழுக்கம் இல்லாதவர்
  564. அழுக்காறு - பொறாமை
  565. ஆக்கம் - செல்வம்
  566. ஒல்கார் - விலகமாட்டார்
  567. உரவோர் - மனவலிமை உடையோர்
  568. ஏதம் - குற்றம்
  569. எய்துவர் -அடைவர்
  570. இடும்பை –துன்பம்
  571. ஒல்லாவே - இயலாவே
  572. உலகம் -உயர்ந்தோர்
  573. ஒட்ட - பொருந்த
  574. ஒழுகுதல் - நடத்தல், வாழ்தல்
  575. கூகை - கோட்டான்.
  576. இகல் - பகை
  577. திரு - செல்வம்
  578. தீராமை - நீங்காமை
  579. அருவினை - செய்தற்கறிய செயல்
  580. ஞாலம் - உலகம்
  581. ஒடுக்கம் - அடங்கி இருப்பது
  582. பொருதகர் - ஆட்டுக்கடா
  583. பேருந்தகைத்து - பின்வாங்கும் தன்iமையது
  584. பொள்ளென - உடனே
  585. புறம்வேரார் - வெளிப்படுத்த மாட்டார்
  586. உள்வேர்ப்பர் - மனத்தினுள் மறைத்து வைத்திருப்பவர்
  587. ஒள்ளியவர் - அறிவுடையார்
  588. செறுநர் - பகைவர்
  589. சுமக்க - பணிக
  590. இறுவரை - முடிவு காலம்
  591. கிழக்காந்தலை - தலைகீழ் (மாற்றம்)
  592. எய்தற்கு - கிடைத்தற்கு
  593. இயைந்தக்கால் - கிடைத்த பொழுது
  594. கூம்பும் - வாய்ப்பற்ற
  595. சீர்த்த இடம் - உரிய காலம்
  596. வணங்கி - பணிந்து
  597. மாண்டார் - மாண்புடைய சான்றோர்
  598. நுணங்கிய நூல் - நுண்ணறிவு நூல்கள்
  599. நோக்கி - ஆராய்ந்து
  600. கொற்கை - பாண்டிய நாட்டின் துறைமுகம்
  601. தென்னம் பொருப்பு - தென் பகுதியில் உள்ள பொதிகை மலை
  602. பழியொடு படரா - மறநெறியில் செல்லாத
  603. அடர்த்து எழு குருதி - வெட்டுப் பட்ட இடத்தினின்றும் பீறிட்டு ஒழுகும் செந்நீர்
  604. பசுந்துணி - பசிய துண்டம்
  605. தடக்கை - நீண்ட கைகள் 
  606. அறுவர்க்கு இளைய நங்கை - ஏழு கன்னியறுள் இளையவளாகிய பிடாரி
  607. இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு - இறைவனை நடனமாட செய்த காளி
  608. சூருடை கானகம் - அச்சம் தரும் காடு
  609. உகந்த - விரும்பிய
  610. தாருகன் - அரக்கன்
  611. பேர்  உரம் கிழித்த பெண் - அகன்ற மார்பினை பிளந்த துர்க்கை
  612. செற்றம் - கறுவு
  613. செயிர்த்தனள் - சினமுற்றவள்
  614. பொற்றொழில் சிலம்பு - வேலைப்பாடு மிக்க பொற்சிலம்பு
  615. கடையகத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்
  616. நீர்வார்க்கண் - நீர் ஒழுகும் கண்கள்
  617. தேரா - ஆராயாத
  618. எள்ளறு - இகழ்ச்சி இல்லாத
  619. இமையவர் - தேவர்
  620. புள் - பறவை (புறா)
  621. புன்கண் -துன்பம்
  622. கடைமணி - அரண்மனை வாயில் மணி
  623. ஆழி - தேர்ச்சக்கரம்
  624. ஏசா - பழியில்லா
  625. கோறல் -கொல்லுதல்
  626. கொற்றம் - அரச நீதி
  627. நற்றிறம் - அற நெறி
  628. படரா - செல்லாத
  629. வாய்முதல் - வாயின் முதலாகிய (உதடு)
  630. தெளிவுறுத்தும்  - விளக்கமாக காட்டும்
  631. சுவடி - நூல்
  632. எளிமை - வறுமை
  633. நானிடவும் - வெட்கப்படவும்
  634. உலகியலின் அடங்கலுக்கும் - வாழ்வியல் முழுமைக்கும்
  635. தகத்தகாய - ஒளி மிகுந்த
  636. சலசலன - ஒலிக்குறிப்பு
  637. சாய்க்காமை - அழிக்காமை
  638. நூற்கழகங்கள் - நூல் நிலையங்கள்
  639. களைந்தோம் - நீக்கினோம்
  640. தாபிப்போம் - நிலை நிறுத்துவோம்
  641. ஆயகாலை - அந்த நேரத்தில்
  642. அம்பி - படகு
  643. நாமம் - பெயர்
  644. துறை - தோணித் துறை
  645. தொன்மை - தொன்று தொட்டு
  646. கல் - மலை
  647. திரள் - திரட்சி
  648. துடி – பறை
  649. அல் -இருள்
  650. சிறுங்கிபேரம் - கங்கை கரையோர நகரம்
  651. திரை -அலை
  652. மருங்கு - பக்கம்
  653. உபகாரத்தன் - பயன்கரதாது உதவுபவன்
  654. நாயடியேன் - நாண் போன்றவன்
  655. எயினர் - வேடர்
  656. நெடியவன் - உயர்ந்தவனாகிய ராமன்
  657. குறுகினன் - வந்துள்ளான்
  658. நாவாய் - படகு
  659. இறை - தலைவன்
  660. பண்ணவன் - நற்குணங்கள் பல உடைய இலக்குவன்
  661. பரிவு - இரக்கம்
  662. குஞ்சி - தலைமுடி
  663. மேனி - உடல்
  664. அருத்தியன் - அன்பு உடையவன்
  665. மாதவர் - முனிவர்
  666. முறுவள் - புன்னகை
  667. விளம்பல் - கூறுதல்
  668. சீர்த்தது - சிறந்தது
  669. பவித்திரம் - தூய்மையானது
  670. இனிதின் - இனிமையானது
  671. உண்டனெம் - உண்டோம் என்பதற்கு சமமானது
  672. தழீஇய - கலந்த
  673. கார்குலாம் - மேகக் கூட்டங்கள்
  674. பார்குலாம் - உலகம் முழுதும்
  675. இன்னல் - துன்பம்
  676. ஈர்கிலா - எடுக்க இயலாத
  677. தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
  678. அடிமை செய்குவேன் - பணி செய்வேன்
  679. குருசில் - தலைவன்
  680. இருத்தி - இருப்பாயாக
  681. நயனம் - கண்கள்
  682. இந்து - நிலவு
  683. நுதல் - நெற்றி
  684. கடிது - விரைவாக
  685. முடுகினன் - செலுத்தினன்
  686. முரிதிரை - மடங்கி விழும் அலை
  687. அமலன் - குற்றமற்றவன்
  688. உன்னேல் - நினைக்காதே
  689. அரி - நெற்கதிர்
  690. செறு - வயல்
  691. யாணர் - புது வருவாய்
  692. வட்டி - பனையோலைப் பெட்டி
  693. நெடிய மொழிதல் - அரசரிடம் சிறப்பு பெறுதல்
  694. காய்ந்தார் - நீக்கினார்
  695. மனை - வீடு
  696. ஆ - பசு
  697. நிறைகோள் - துலாக்கோள் (தராசு)
  698. தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
  699. தடம் - தடாகம்
  700. மந்தமாருதசீதம் - இளம் தென்றல் காற்றுடன் கூடிய குளிர்ந்த நீர்
  701. சந்தம் - அழகு
  702. கல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்
  703. புவனம் - உலகம்
  704. சூலை - கொடிய வயிற்று நோய்
  705. தெருளும் - தெளிவில்லாத
  706. கரம் -கை
  707. மிசை - மேல்
  708. திருநீற்று காப்பு - பெரியோர்களால் வாழ்த்தி வழங்கப்படும் திருநீறு
  709. நேர்ந்தார் - இசைந்தார்
  710. தங்கள் சேயவர் - தங்களின் குழந்தைகள்
  711. பொற்குருத்து - மிக இளமையான வாழைக் குருத்து
  712. ஒல்லை - விரைவு
  713. மல்லல் - வளமான
  714. அம் - அழகிய
  715. வாள் - ஒளி
  716. அரா - பாம்பு
  717. அங்கை - உள்ளங்கை
  718. உதிரம் - குருதி
  719. வீந்தான் - இறந்தான்
  720. பூதி - திருநீறு
  721. அங்கணர் - அழகிய நெற்றிக் கண்ணுடைய சிவன்
  722. பொறாது - ஏற்காது
  723. மெய் - உண்மை
  724. பணிவிடம் - பாம்பின் நஞ்சு
  725. சவம் - பிணம்
  726. பாற்றுவித்தார் - போக்குவித்தார்.
  727. அரியாசனம் - சிங்காதனம்
  728. வரம்பு – வரப்பு
  729. ஏர் - அழகு
  730. நாற்கரணம் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
  731. நெறிநாலு - வைதறுப்பம், கௌடம், பாஞ்சாலம், மாக்கதம் ஆகிய செய்யுள் நெறிகள்
  732. நாற்பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு
  733. கோட்டிகொளும் - கூட்டமாக கூடும்
  734. சீத்தையர் - கீழானவர், போலிப்புலவர்
  735. தூர்கட்டி - பயிரடி பருத்து வளர்தல்
  736. நாளிகேரம் - தென்னை
  737. மூத்த - முதிர்ந்த
  738. கேண்மை - நட்பு
  739. தேர்ந்து - ஆராய்ந்து
  740. நோய் - துன்பம்
  741. உறாஅமை - துன்பம் வராமல்
  742. பெற்றியார் - பெருமை உடையார்
  743. பேணி - போற்றி
  744. தமர் - உறவினர்
  745. வன்மை - வலிமை
  746. ஒழுகுதல் - ஏற்று நடத்தல்
  747. தலை - சிறப்பு
  748. சூழ்வார் - அறிவுடையார்
  749. சூழ்ந்து கொளல் - நட்பாக்கி கொள்ளுதல்
  750. தக்கார் - தகுதியுடைய பெரியோர்
  751. செற்றார் - பகைவர்
  752. இல் - இல்லை
  753. இடிக்கும் - கடிந்துரைக்கும்
  754. தகைமை - தன்மை
  755. ஏமறா - பாதுகாவல் இல்லாத
  756. மதலை - துணை
  757. பத்தடுத்து - பத்து மடங்கு
  758. பொருளல்லவர் - தகுதியற்றவர்
  759. பொருள் - செல்வம்
  760. எள்ளுவர் - இகழ்வர்
  761. பொய்யா விளக்கம் - அணையா விளக்கு
  762. இருள் - பகை
  763. ஈனும் - தரும்
  764. புல்லார் - பற்றார்
  765. உருபொருள் - அரசு உரிமையால் வரு பொருள்
  766. உல்கு - வரியாக வரும் பொரும்
  767. தெறு - பகை
  768. குழவி - குழந்தை
  769. செவிலி - வளப்புத் தாய்
  770. குன்று - மலை
  771. கைத்தொன்று - கைப்பொருள்
  772. செருக்கு - இறுமாப்பு
  773. எஃகு - உறுதியான
  774. ஒண் பொருள் - சிறந்த பொருள்
  775. எண் பொருள் - இயல்பாய் கிடைக்கும் பொருள்
  776. இரண்டும் - அறனும் இன்பமும்
  777. ஏமாப்பு - பாதுகாப்பு
  778. நடலை - துன்பம்
  779. சேவடி - இறைவனின் சிவந்த திருவடிகள்
  780. நமன் - எமன்
  781. தெண்டிரை - தெளிந்த அலைகள்
  782. கான் - காடு
  783. தடக்கரி - பெரிய யானை
  784. திரள் - கூட்டம்
  785. அறைகுவன் - சொல்லுவான்
  786. தாரை - வழி
  787. அணித்தாய் - அண்மையில்
  788. அடவி - காடு
  789. உழுவை - புலி
  790. கூண்ட - சேர்ந்த
  791. கனல் - நெருப்பு
  792. வெள்ளெயிறு - வெண்ணிற பற்கள்
  793. புலால் - இறைச்சி
  794. வள்ளுகிர் - கூர்மையான நகம்
  795. மடங்கல் - சிங்கம்
  796. நிணம் - கொழுப்பு (இறைச்சி)
  797. கோடு - தந்தம்
  798. கிரி -மலை
  799. இரும்பனை - பெரிய பனை
  800. உரும் - இடி
  801. அலறும் - முழங்கும்
  802. தொனி - ஓசை
  803. கவை - பிளந்த
  804. கேழல் - பன்றி
  805. எண்கு - கரடி
  806. மரை -மான்
  807. எழில் - அழகு
  808. புயம் - தோள்
  809. வேங்கை - புலி
  810. வென்றி - வெற்றி
  811. அணித்து - அருகில்
  812. மாதிரம் - மலை
  813. கேசரி – சிங்கம்
  814. புளகிதம் - மகிழ்ச்சி
  815. காது - கொல்லுதல்
  816. கவின் - அழகு
  817. பூதரம் - மலை
  818. வீதி வாய்வர - பாதையில் வர
  819. பெருஞ் சிரம் - பெரிய தலை
  820. தெண்டனிட்டது - வணங்கியது
  821. தெரிசனம் - காட்சி
  822. சலாம் - வணக்கம்
  823. திண்திறள் - உறுதியான வலிமை
  824. புந்தி - அறிவு
  825. மந்தராசலம் - மந்தர மாலை
  826. சந்தம் - அழகிய
  827. இவண் நெறியில் - இவ்வழியில்
  828. செகுத்திடுவது - உயிர் வதை செய்வது
  829. அறைந்த - சொன்ன
  830. அதிசயம் - வியப்பு
  831. உன்னி - நினைத்து
  832. தெளிந்தார் - தெளிவு பெற்றார்
  833. கிளை - சுற்றம்
  834. நோன்றல் - பொறுத்தல்
  835. செத்தை - குப்பைக் கூளம்
  836. இளைப்பாறுதல் - ஓய்வெடுத்தல்




 

 

thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post