15 - TNPSC GROUP II & IV - GENARAL TAMIL MODEL QUESTION 15 WITH ANSWER KEY PDF FREE DOWNLOAD - பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 15 விடையுடன் இலவச பதிவிறக்கம்

 

TNPSC GROUP II & IV GENARAL TAMIL MODEL QUESTION PAPER - 15 WITH ANSWER KEY 

Free download 

 பொதுத்தமிழ் கட்டாய மற்றும் தகுதித் தேர்வு  மாதிரி வினாத்தாள் - 15 

விடையுடன் இலவச பதிவிறக்கம்

2022 புதிய பாடத்திட்டம்

பகுதி (அ) இலக்கண குறிப்பறிதல்

MODEL QUESTION PAPER 15 WITH ANSWER KEY

PDF FILE FREE DOWNLOAD

👇 


மற்ற 29 மாதிரி வினாத்தாள்கள் இலவச பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள மாதிரி வினாத்தாள்களை கிளிக் செய்யவும் 👇



















மாதிரி வினாத்தாள் - 19 (ஆறாம்வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 20 (ஏழாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 21 (எட்டாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 22 (ஒன்பதாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 23 (பத்தாம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 24 (11 மற்றும் 12 ஆம் வகுப்பு)

மாதிரி வினாத்தாள் - 25 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 1)

மாதிரி வினாத்தாள் - 26 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 2)

மாதிரி வினாத்தாள் - 27 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 3)

மாதிரி வினாத்தாள் - 28 (முழு பாடத்திட்டம் -  முழுத் தேர்வு - 4)

மாதிரி வினாத்தாள் - 29 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 5)

மாதிரி வினாத்தாள் - 30 (முழு பாடத்திட்டம் - முழுத்தேர்வு - 6)














மாதிரி வினாத்தாள் -15  👇

மாதிரி வினாத்தாள்- 15 (200 வினாக்கள்)


1. அடிப்படையான தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

A) 12

B) 18

C) 30

D) 247



2. தமிழின் அடிப்படை சொற்கள் எத்தனை வகைப்படும் ?

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு



3. நான் அவன் வீட்டுக்குப் போனேன். ஆனால் நீ வரவில்லை - இத்தொடரில் உள்ள படர்க்கை இடத்தை குறிக்கும் சொல் எது ?

A) நான்

B) அவன்

C) நீ

D) இவற்றில் எதுவுமில்லை



4. கீழ்க்கண்டவற்றுள் செய்யுள் மொழி எது எனக் கண்டறிக ?

A) உப்பு... உப்பு...

B) கொல்

C) அம்மா

D) நடிகன்



5. தனிக்குறிலை அடுத்து எந்த எழுத்து வந்தால் அந்த சொல் பிறமொழிச்
சொல்லாக இருக்கும் ?


A) ற்

B) ர்

C) ன்

D) ப்



6. உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் எவை ?

A) க், ச், த், ப்

B) ர், ழ்

C) ற், ன்

D) ப், வ்



7. வினா எழுப்புவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் பயன்படும் எழுத்து எது ?

A) ஏ

B) அ

C) இ

D) உ



8. பெயர்ச்சொற்களையும் வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம் ?

A) நான்கு

B) ஐந்து

C) ஆறு

D) ஏழு



9. மொழியின் அடிப்படை உறுப்பு எது ?

A) எழுத்து

B) சொல்

C) சொற்றொடர்

D) இவையனைத்தும்



10. பிழையற்ற தொடரைக் காண்க

A) கிணரில் போட்டேன்

B) சுவற்றில் எழுதினேன்

C) வயிர் பசிக்கிறது

D) கூரை வேய்ந்தேன்



11. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்ற தொடர் எவ்வகை பொருத்தத்திற்கு சான்றாக அமைந்துள்ளது?

A) திணைப் பொருத்தம்

B) எண் பொருத்தம்

C) பால் பொருத்தம்

D) சிறப்புப் பொருத்தம்



12. இனமுள்ள அடைமொழிச் சொல்லைக் காண்க.

A) வெண்ணிலவு 

B) கருங்காக்கை

C) செங்கதிரோன் 

D) செந்தாமரை



13. தற்பொழுது வழக்கத்தில் இல்லாத சுட்டெழுத்து எது ?

A) உ

B) அ

C) இ

D) எ



14. தவறான கூற்றினை கண்டறிக.

A) உரிச்சொல் பெயருடனும் வினையுடனும் சேர்ந்து பொருள்தரும்

B) உரிச்சொல் தனியாக நின்று பொருள் தராது

C) இடைச்சொல் தனியாக செயல்படாமல் பெயர்ச்சொல்லுடன் வினைச்சொல்லுடன் சேர்ந்து வரும்

D) இடைச் சொல், இணைச் சொல்லாகவும், அசையாகவும் வேற்றுமை உருபாகவும் உவம உருபுடனும் இணைந்து வராது.



15. சார்பெழுத்து அல்லாத சொல்லைக் காண்க?

A) எஃகு

B) செல்வம்

C) கொம்பு

D) பண்பு



16. இடைச்சொல் அல்லாத சொல்லைக் காண்க.

A) உம்

B) ஐ

C) கொல்

‘D) நெல்



17. தமிழில் மிகுதியாக உள்ள பெயர்ச் சொல் எது ?

A) இடுகுறிப்பெயர்

B) காரணப்பெயர்

C) தொழிற்பெயர்

D) பொருட்பெயர்



18. பிழையற்ற தொடரைக் காண்க.

A) பள்ளிக்கு அருகாமையில் என் வீடு இருக்கிறது

B) என் வீட்ல யாருமே இல்லே

C) எம் ஊர் ஆத்துல தண்ணியே இல்லே

D) என் அப்பா அதிகமாக செலவு செய்கிறார்



19. பொருத்துக

1. இடுகுறி பொதுப்பெயர் - அ) பனை

2. இடுகுறிச் சிறப்புப்பெயர் - ஆ) மரங்கொத்தி

3. காரணப் பொதுப்பெயர் - இ ) காடு

4. காரணச் சிறப்புப்பெயர் - ஈ) பறவை


1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. ஈ இ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. இ அ ஈ ஆ



20. பொருந்தாத சொல்லைக் கண்டறிக

A) உயர்மரம்

B) அச்சுமரம்

C) படைமரம்

D) விழுதுகம்பி



21. பொருத்துக

1. எழிலி - அ) தொழிற் பெயர்

2. நொடி - ஆ) பொருட் பெயர்

3. தலை - இ) சினைப் பெயர்

4. கற்பித்தல் - ஈ) காலப் பெயர்

1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. இ ஈ அ ஆ

C. ஆ ஈ இ அ

D. அ இ ஈ ஆ



22. வினையெச்சத்தைக் காண்க.

A) எடுத்து

B) பழுத்த

C) வந்தான்

D) கேட்ட



23. இடைப்போலி சொல்லைக் காண்க. ?

A) இலைஞ்சி

B) அறன்

C) அஞ்சு

D) பந்தர்



24. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) இடைச் சொல் - வெல்

B) பெயர்ச் சொல் - வேலன்

C) வினைச் சொல் - வந்தான்

D) உரிச்சொல் - மாவீரன்



25. கிழமைப் பொருளில் வரும் வேற்றுமை உருபு எது ?

A) ஆறாம் வேற்றுமை உருபு

B) ஐந்தாம் வேற்றுமை உருபு

C) நான்காம் வேற்றுமை உருபு

D) மூன்றாம் வேற்றுமை உருபு



26. பெயர்ச் சொல்லின் பொருளை செயப்படு பொருளாக வேறுபடுத்தும் வேற்றுமை எது?

A) இரண்டாம் வேற்றுமை

B) மூன்றாம் வேற்றுமை

C) நான்காம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



27. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

A) ஆறு

B) ஐந்து

C) நான்கு

D) மூன்று



28. கண் + அழகு = கண்ணழகு இப்புணர்ச்சியில் எந்த புணர்ச்சி விதி பொருந்தும் ?

A) இயல்பிDம் விதியிDம் நின்ற உயிர் முன் கசதப மிகும்

B) தனிக்குறில் முன்றொற் றுயிர்வரி னிரட்டும்

C) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்

D) இ, ஈ, ஐ வழி யவ்வும்



29. காலம் கரந்த பெயரெச்சம் என்று அழைக்கப்படுவது எது ?

A) பண்புத் தொகை

B) வினைத் தொகை

C) உம்மைத் தொகை

D) வேற்றுமைத் தொகை



30. பொருந்தாத இணையைக் கண்டறிக ?


A) கோங்கு - மென்தொடர் குற்றியலுகரம்

B) குத்து - வன்தொடர் குற்றியலுகரம்

C) பாலாறு - நெடில்தொடர் குற்றியலுகரம்

D) கொய்பு - இடைத் தொடர் குற்றியலுகரம்



31. படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்கப்படும் பயன்படும் வேற்றுமை ?

A) இரண்டாம் வேற்றுமை

B) மூன்றாம் வேற்றுமை

C) ஐந்தாம் வேற்றுமை

D) விளி வேற்றுமை



32. பொருத்துக

1. ஆடுகொடி - அ) வேற்றுமைத் தொகை

2. வெண்ணிலவு - ஆ) உம்மைத் தொகை

3. இட்டலி வடை - இ ) பண்புத் தொகை

4. வேலன் மகன் - ஈ) வினைத் தொகை


1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. ஈ இ அ ஆ

C. ஈ அ ஆ இ

D. ஈ இ ஆ அ



33. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை

B) தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை

C) ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை

D) குகைப் புலி - ஆறாம் வேற்றுமைத் தொகை



34. இயல்புப் புணர்ச்சி சொல் எது என கண்டறிக ?

A) பனைமரம்

B) பாடவேளை

C) பொற்குடம்

D) வாழைக்குலை

35. பலர் முன்னே கூறுவதற்கு இடர்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கி தகுந்த சொற்களால் அப்பொருளைத் தருவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?

A) மங்கலம்

B) இடக்கரடக்கல்

C) குழூஉக்குறி

D) மரூஉ



36. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) தஞ்சை - மரூஉ

B) வாய்பூசி வந்தேன் - இடக்கரடக்கல்

C) இறைவனடி சேர்ந்தார் - மங்கலம்

D) பறி - இலக்கணப் போலி



37. வெள்ளாடு பிடித்துவரும் மாமாவைப் பார்த்து, யானை வருகிறது எனச் சிறுவர்கள் ஓடினர் இத்தொடர் எவ்வகை வழக்கு என கண்டறிக.

A) குழூஉக்குறி

B) மரூஉ

C) இலக்கணப் போலி

D) இடக்கரடக்கல்



38. வாழ்த்துதல், வேண்டுதல், கட்டளையிடுதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் எது ?

A) வினாத் தொடர்

B) செய்வினைத் தொடர்

C) விழைவுத் தொடர்

D) தன்வினைத் தொடர்



39. பிழையற்ற தொடரைக் காண்க.

A) நரி கத்த, ஆந்தை கூவியது

B) நரி Cளையிட, ஆந்தை அலறியது

C) நரி உறும, ஆந்தை பேசியது

D) நரி குரைக்க, ஆந்தை பேசியது



40. பொருத்துக

1. துயில் - அ) வினைத் திரிசொல்

2. கேணி - ஆ) பெயர்ச் திரிசொல்

3. புஷ்பம் - இ) திசைச் சொல்

4. விளி - ஈ) வடசொல்


1. 2. 3. 4.

A. அ இ ஆ ஈ

B. இ அ ஈ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ





41. பத்து என்னும் எண்ணுப் பெயரின் எண்ணடை எது/எவை ?

A) பதின்

B) பன்

C) A மற்றும் B

D) பதின், பன், எண்



42. பொருத்துக

1. பொருட்பெயர்ப் பகுபதம் - அ) சென்னையான்

2. இடப்பெயர்ப் பகுபதம் - ஆ) மூக்கன்

3. காலப்பெயர்ப் பகுபதம் - இ) பொன்னன்

4. சினைப்பெயர்ப் பகுபதம் - ஈ) சித்திரையான்


1. 2. 3. 4.

A. இ அ ஈ ஆ

B. இ உ அ ஆ

C. ஆ அ ஈ இ

D. C இ ஈ ஆ



43. ‘வருந்தாமரை’ என்னும் சொல்லை "துன்புறும் பசுவும் மானும்"" என்னும் பொருள் தரும் வகையில் பிரித்து எழுதுக ?

A) வருந்தா + மரை

B) வரும் + தாமரை

C) வருந்து + ஆ + மரை

D) வரும் + தாமர் + ஐ



44. தவறான இணையைக் கண்டறிக.

A. மாமுன் நிரையும், விள முன் நேரும் வருவது - இயற்சீர் வெண்டளை

B. விளமுன் நிரை வருவது - நிரையொன்றாசிரியத் தளை

C. காய்முன் நேர் வருவது - வெண்சீர் வெண்டளை

D. காய்முன் நிரை வருவது - ஒன்றிய வஞ்சித்தளை



45. பொருத்துக

1. பாலை இறக்கு - அ) நீட்டலளவையாகுபெயர்

2. வள்ளுவர் சொல் - ஆ) தொழிலாகுபெயர்

3. வற்றல் உண்டான் - இ) தானியாகுபெயர்

4. 2 மீட்டர் கொடு - ஈ) சொல்லாகுபெயர்


1. 2. 3. 4.

A. இ ஈ ஆ அ

B. இ ஈ அ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ



46. எழுத்துகளின் தோற்றம் பற்றிய பொருந்தாத இணையைக் கண்டறிக ?

A. மேல்வாய்ப் பல்லின் அடியை, நாக்கின் நுனி பொருந்துதல் - த், ந்

B. மேல் உதடும் கீழ் உதடும் பொருந்துதல் - ப், ம்

C. நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துதல் - ய்

D. மேல்வாயை நாக்கின் நுனி தடவுதல் - ம், த்




47. தவறான இணையை கண்டறிக ?

A. உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் - கழுத்து

B. மெல்லின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் - மூக்கு

C. வல்லின எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம் - மார்பு

D. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் - மேல் அண்ணம்



48. வெண்பா தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக

A) இயற்சீரும் வெண்சீரும் மட்டுமே வரும்

B) இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் வரும்

C) பிற தளைகளும் வரும்

D) ஈற்றடியின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்



49. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல் - இக்குறளின் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

A) மிகுதியான் - மிக்கவை

B) தகுதியான் - வென்றுவிடல்

C) மிகுதியான் - தகுதியான்

D) தாம் - தம்



50. குறில் எழுத்து நெடிலாக மாறி பின் அளபெடுக்கும் அளபெடை எது ?

A) இன்னிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை



51. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை எது?

A) இன்னிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை



52. ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ அடிகளையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ளும் முறை?

A) எதுகை

B) மோனை

C) இயைபு

D) பொருள்கோள்



53. பொருத்துக

1. தன்மை ஒருமை - அ) நாம்

2. தன்மை பன்மை - ஆ யான்

3. முன்னிலை ஒருமை - இ) நீ

4. படர்க்கை ஒருமை - ஈ) தான்


1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. இ ஈ அ ஆ

C. ஆ அ இ ஈ

D. அ இ ஈ ஆ



54. நீ என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் மூன்றாம் வேற்றுமை உருபேற்கும்போது எவ்வாறு மாறும் ?

A) நின்னால்

B) உன்னால்

C) A மற்றும் B

D) இவற்றில் எதுவுமில்லை.



55. பொருந்தாத இணையை கண்டறிக

A) பெயர்ச்சோல் - மயிலம்

B) வினைச் சொல் - நடந்தான்

C) இடைச்சோல் - நட

D) உரிச்சொல் - சால



56. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகிவருவது ?

A) காரியாகுபெயர்

B) கருவியாகுபெயர்

C) சொல்லாகுபெயர்

D) கருத்தாவாகுபெயர்



57. எவ்வகை ஆகுபெயர் எனக் கண்டறிக - கம்பரைப் படித்தேன்

A) உவமையாகு பெயர்

B) காரியவாகு பெயர்

C) கருத்தாவாகு பெயர்

D) உவமையாகு பெயர்



58. பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வதுபோலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது எது ?

A) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

B) அளைமறிபாப்புப் பொருள்கோள்

C) அடிமறிமாற்றுப் பொருள்கோள்

D) மொழிமாற்றுப் பொருள்கோள்



59. இலக்கணக் குறிப்பறிக - வெண்குடை

A) வினைத் தொகை

B) பண்புத் தொகை

C) உவமைத் தொகை

D) உம்மைத் தொகை



60. அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக - உண்பது நாழி உடுப்பவை இரண்டே

A) பண்புத் தொகை

B) உவமைத் தொகை

C) ஆகுபெயர்

D) உம்மைத் தொகை



61. குறுந்தொகையை தொகுத்தவர் யார் ?

A) புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.

B) உருத்திர சன்மன்

C) பூரிக்கோ

D) பெருந்தேவனார்



62. பொருத்துக

1. இயல்பு புணர்ச்சி - அ) கற்கோட்டை

2. தோன்றல் விகாரம் - ஆ) வாழைப்பழம்

3. கெடுதல் விகாரம் - இ) பொன்வளையல்

4. திரிதல் விகாரம் - ஈ) மரவேல்




1. 2. 3. 4.

A. அ ஆ இ ஈ

B. இ ஈ அ ஆ

C. இ ஆ ஈ அ

D. அ இ ஈ ஆ



63. அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது எது ?

A) குறளடி

B) சிந்தடி

C) அளவடி

D) நெடிலடி



64. தொடை எத்தனை வகைப்படும் ?

A) எட்டு

B) ஏழு

C) ஆறு

D) ஐந்து



65. தொடை விகற்பம் எத்தனை வகைப்படும் ?

A) 53

B) 35

C) 25

D) 52



66. கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும்
கொடிகள் வானம் படிதர மூடும் இச்செய்யுளில் வந்துள்ள தொடை எது ?


A) மோனை மட்டும் வந்துள்ளது.

B) எதுகை மற்றும் மோனை மட்டும் வந்துள்ளது.

C) எதுகை, மோனை மற்றும் இயைபு வந்துள்ளது.

D) எதுகை, மோனை, முரண் மற்றும் அளபெடை வந்துள்ளது



67. பொருத்துக

1. சிங்கம் - 1) முரலும்

2. வண்டு - 2) கொக்கரிக்கும்

3. கோழி - 3) முழங்கும்

4. பூனை - 4) சீறும்


a. b. c. d.

A. 1 3 4 2

B. 4 3 1 2

C. 2 4 1 3

D. 3 1 2 4



68. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது ?


A) உருவக அணி

B) தற்குறிப்பேற்ற அணி

C) உவமை அணி.

D) வஞ்சப் புகழ்ச்சி அணி



69. ‘நுனித்து’ என்ற சொல்லை பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தால் வினையெச்ச விகுதியாக வருவது எது ?

A) து

B) த்

C) நுனி

D) உ



70. ஒரு மொழிக்கு தேவைப்படும் ஒலிகள் எண்ணம் எவ்வளவு? தமிழில் உள்ள ஒலிகள் எண்ணிக்கை?

A) 33 - 500

B) 600 - 44

C) 44 - 600

D) 500 - 33



71. இலக்கணக் குறிப்பு அறிக - குன்றேறி

A) உரிச்சொல் தொடர்

B) வினைத் தொகை

C) ஏழாம் வேற்றுமைத் தொகை

D) பண்புத் தொகை



72. இலக்கணக் குறிப்பு அறிக - நனிமனம்

A) உரிச்சொல் தொடர்

B) வினைத் தொகை

C) ஏழாம் வேற்றுமைத் தொகை

D) பண்புத் தொகை



73. நொச்சித் திணை என்பது ?

A) மதிலைக் காத்தல்

B) போருக்கு செல்வது

C) ஆநிரை கவர்தல்

D) ஆநிரை மீட்டல்



74. வெண்பாவின் பொது இலக்கணத்தைப் பெற்று, நான்கடிகளைக் கொண்டதாயும், இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றும் முதல் இரண்டடி ஒரு விகற்பமாயும், கடைசி இரண்டடி ஒரு விகற்பமாயும் நான்கடிகளும் ஒரு விகற்பமாயும் வருவது ?

A) குறள் வெண்பா

B) நேரிசை வெண்பா

C) சிந்தியல் வெண்பா

D) இவற்றில் எதுவுமில்லை



75. இதைச் செய்வாயா ? என்று வினவியதற்கு கை வலிக்கும் என விடையளிப்பது எவ்வகை விடை எனக் கூறுக.

A) உற்றது உரைத்தல் விடை

B) இனமொழி விடை

C) உறுவது கூறல் விடை

D) ஏவல் விடை



76. பெயர்ச்சொல் வகையறிக - நோன்றல் ?

A) பண்புப் பெயர்

B) காலப்பெயர்

C) பொருட்பெயர்

D) தொழிற்பெயர்



77. சரியான இணையைக் கண்டறிக ?

A) நண்பகல் - காலை 6 முதல் 10 மணி வரை

B) நண்பகல் - காலை 10 முதல் 2 மணி வரை

C) நண்பகல் - காலை 2 முதல் 10 மணி வரை

D) நண்பகல் - காலை 2 முதல் மாலை 4 மணி வரை



78. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) இளவேனில் - சித்திரை, வைகாசி

B) முதுவேனில் - ஆனி, ஆடி

C) முன்பனிக் காலம் - ஐப்பசி, கார்த்திகை

D) கார்காலம் - ஆவணி, புரட்டாசி



79. இராமன் நன்கு படித்ததால் தேர்வில் வெற்றி பெற்றான் - எவ்வகை தொடர் எனக் கண்டறிக

A) தொடர்நிலைத் தொடர்

B) கலவைத் தொடர்

C) தனிநிலைத் தொடர்

D) வினாத் தொடர்



80. விடை எத்தனை வகைப்படும் ?

A) ஆறு

B) எட்டு

C) ஐந்து

D) ஏழு



81. ‘வெல்’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க ?

A) வென்றவன்

B) வெல்லுதல்

C) வென்று

D) வென்றான்



82. ஓரெழுத்து ஓர் மொழிக்கான பொருளைத் தேர்க - மா ?

A) அழகு

B) அறிவு

C) விலங்கு

D) இவையனைத்தும்



83. பொருந்தாத இணையை கண்டறிக ?

A) மாயோன் - காடுறை உலகம்

B) சேயொன் - மைவரை உலகம்

C) வேந்தன் - தீம்புனல் உலகம்

D) வருணன் - தெண்டிரை உலகம்



84. இலக்கணக் குறிப்பு தருக - திருக்குறள்.

A) அடையடுத்த காரியவாகுபெயர்

B) காரியவாகுபெயர்

C) அடையடுத்த கருவியாகுபெயர்

D) இவற்றில் எதுவுமில்லை



85. தீயினாற் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

A) வேற்றுமை அணி

B) இல்பொருள் உவமை அணி

C) ஏகதேச உருவக அணி

D) தற்குறிப்பேற்ற அணி



86. விருத்தம் என்னும் பாவினத்தால் ஆன முதல் தமிழ்க் காப்பியம் எது?

A) நரிவிருத்தம்

B) சீவக சிந்தாமணி

C) சிலப்பதிகாரம்

D) மணிமேகலை



87. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A) மங்கை - 11 வயது முதல் 13 வயது வரை

B) மடந்தை - 14 வயது முதல் 19 வயது வரை

C) அரிவை - 20 வயது முதல் 25 வயது வரை

D) தெரிவை - 26 வயது முதல் 32 வயது வரை



88. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்த இலக்கியம் எது ?

A) பள்ளு

B) தூது

C) உலா

D) பிள்ளைத் தமிழ்



89. தூது இலக்கியம் எந்த பாவால் பாடப்பெறல் வேண்டும் ?

A) வெண்டளை விரவிய வெண்பா

B) வெண்டளை விரவிய வஞ்சிப்பா

C) வெண்டளை விரவிய கலிவெண்பா

D) அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்



90. கண்ணி என்பது ?

A) நான்கடி பாட்டு

B) மூன்றடி பாட்டு

C) இரண்டடி பாட்டு

D) ஓரடிச் செய்யுள்



91. எந்தநில மக்கள் குரவைக் கூத்தாடுவர் ?

A) குறிஞ்சி

B) முல்லை

C) மருதம்

D) நெய்தல்



92. தனித்து இயங்கும் எழுத்து எது/எவை ?

A) சார்பெழுத்து

B) முதலெழுத்துகள்

C) ஆய்தஎழுத்து

D) இவை அனைத்தும்



93. உயிர்மெய் எழுத்துகள் ----------- வகையில் அடங்கும்

A) சுட்டெழுத்து

B) சார்பெழுத்து

C) முதல் எழுத்து

D) இவற்றில் எதுவுமில்லை.



94. அஃகேனத்தின் வேறுபெயர் அல்லாதது எது ?

A) முப்புள்ளி

B) முப்பாற்புள்ளி

C) தனிநிலை

D) கேடயம்



95. அஃகேனம் சொல்லில் எவ்வாறு இடம்பெறுவது சார்ந்து தவறான கூற்று எது?

A) ஆய்த எழுத்து ஒரு சொல்லின் இடையில் மட்டுமே வரும்

B) ஆய்த எழுத்தின் முன் குறிலும், அதன்பின் வல்லின உயிர்மெய்க் குறிலும் வரும்.

C) ஆய்த எழுத்து மொழிக்கு முதலிலும், வன்தொடர் குற்றியலுகரமாயின் மொழிக்கு இறுதியிலும் இடம் பெறும்

D) ஆய்தஎழுத்து மொழிக்கு முதலிலும், கடையிலும் இடம்பெறாது



96. மிகச்சரியான கூற்றினை கண்டறிக ?


A) எல்லா குற்றியலுகர எழுத்துகளும் சார்பெழுத்துகளே

B) சார்பெழுத்துகள் அனைத்தும் குற்றியலுகரங்களே

C) எல்லா சார்பெழுத்துகளும் குற்றியலிகரங்களே

D) குற்றியலிகரங்கள் அனைத்தும் நெட்டெழுத்துகளே.



97. அஃகேனத்திற்கு ஆய்த எழுத்து என்று பெயர் வரக் காரணம் என்ன ?

A) மொழியைக் காக்கும் ஆயுதம் போல் அஃகேனம் செயல்படுவதால்

B) எழுத்துகளைக் காக்கும் ஆயுதம் போல் அஃகேனம் செயல்படுவதால்

C) போர் வீரர்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதத்தில் (கேடயம்) காணப்படும் மூன்று குமிழ்ப்புள்ளிகள்போன்று இருத்தலால்

D) மொழிக்கு முதலிலும், இறுதியிலும் அமையாமல் பாதுகாப்பாக இடையில் வருவதனால்



98. சரியான இணையை கண்டறிக

A) பெயர்ச்சொல் - ஆசிரியர்

B) வினைச்சொல் - ஐந்தும் ஆறும்

C) இடைச்சொல் - மாவீரன்

D) உரிச்சொல் - வேலன்



99. மனதார வாழ்த்தினான் - இத்தொடரில் உள்ள இடைச்சொல் எது ?

A) மனம்

B) ஆர

C) வாழ்த்து

D) ஆன்



100. வளையல் என்பது?

A) காரண பொதுப்பெயர்

B) காரண சிறப்புப்பெயர்

C) இடுகுறி சிறப்புப் பெயர்

D) இடுகுறி பொதுப்பெயர்



101. முக்காலி என்பது?

A) காரண பொதுப்பெயர்

B) காரண சிறப்புப்பெயர்

C) காரண இடுகுறி சிறப்புப் பெயர்

D) இடுகுறி பொதுப்பெயர்



102. அரிவாள் என்பது?

A) காரண பொதுப்பெயர்

B) காரண சிறப்புப்பெயர்

C) இடுகுறி சிறப்புப் பெயர்

D) இடுகுறி காரணப்பெயர்



103. பிழையற்ற தொடரைக் காண்க

A) விறலியர் தன் போஜனத்திற்காக இசையை கற்றனர்.

B) விறலியர் இசையை ஜாக்கிரதையாக பாதுகாத்தனர்

C) அDமன் தன்புகழை தக்க வைத்துக் கொண்டான்

D) அDமன் தன்புகழை தங்க வைத்துக் கொண்டான்



104. பெயர்ச்சொல் வகையறிக - " வாழ்க்கை "

A) பொருட்பெயர்

B) இடப்பெயர்

C) காலப்பெயர்

D) தொழிற்பெயர்



105. தவறான கூற்றினை கண்டறிக

A) இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பகாப்பதங்களாகவே இருக்கும்

B) பிரித்தால் பொருள் தராத சொல் பகுபதம் எனப்படும்

C) பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்Dம் ஆறன் அடியாகத் தோன்றுவது பெயர்ப்பகுபதம்.

D) பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பகுக்கப்படும் வினைமுற்று, வினைப்பகுபதம் எனப்படும்.



106. பெட்டி என்பது --------- ஆகும்


A) காரண பொதுப்பெயர்

B) காரண சிறப்புப்பெயர்

C) இடுகுறி சிறப்புப் பெயர்

D) இடுகுறி பொதுப்பெயர்



107. பாவேந்தர், பாரதியைப் புகழ்ந்து பாடினார் என்ற தொடர் எவ்வகை பொருத்தத்தை குறிக்கிறது

A) இடப்பொருத்தம்

B) சிறப்புப் பொருத்தம்

C) எண் பொருத்தம்

D) பால் பொருத்தம்



108. பொருத்துக

1. தொழிற்பெயர் - அ) அகழ்வார்

2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஆ) வருதல்

3. பண்புப் பெயர் - இ) சூடு

4. வினையாலணையும் பெயர் - ஈ) நன்றி


1. 2. 3. 4.

A. இ அ ஈ ஆ

B. இ ஈ அ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ

109. எண் பொருத்தம் உடைய தொடர் எது

A) கோலமயில் ஒயிலாக ஆடியது.

B) வண்டுகள் தேன் குடித்தன.

C) விண்கலங்கள் விண்ணில் பறந்தன.

D) அவன் பாடம் படித்தான்.



110. எவ்வகை ஆகுபெயர் என கண்டறி - " தயிரை இறக்கு"

A) பொருளாகுபெயர்

B) அளவையாகு பெயர்

C) தானியாகு பெயர்

D) கருத்தாவாகு பெயர்



111. நம் முன்னோர் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயர் ?

A) இடுகுறிப்பெயர்

B) காரணப்பெயர்

C) பொதுப்பெயர்

D) சிறப்புப்பெயர்



112. பொருந்தாத இணையைக் கண்டறிக

A) அமாவாசை - காருவா

B) அகங்காரம் - மிடுக்கு

C) இன்குலாப் - புரட்சி

D) காலி - போக்கிலி



113. ‘குயில்’ என்னும் சொல்--------- பெயராகும்.?

A) காரண சிறப்புப் பெயர்

B) இடுகுறி பொதுப்பெயர்

C) காரண பொதுப்பெயர்

D) இடுகுறி சிறப்புப் பெயர்



114. தொழிற்பெயர் விகுதி அல்லாது எது ?

A) ஐ

B) அரவு

C) ஆணை

D) அர்



115. பண்புப் பெயரைக் கண்டறிக ?

A) புலவி

B) கொலை

C) பறவை

D) மழவு



116. பண்புப் பெயராகவும் தொழிற் பெயராகவும் அமைந்த சொல்லைக் கண்டறிக

A) கொலை

B) புளிப்பு

C) வாழ்க்கை

D) ஒழுக்கம்



117. நீர் என்னும் முன்னிலைப் பெயர் வேற்றுமை உருபேற்கும் போது எவ்வாறு திரியும்?

A) நும், உம்

B) நுங்கள், உங்கள்

C) தன், தம்

D) தங்கள்



118. கருவிப் பொருளைக் குறிக்காமல், அதனின் தோன்றிய காரியத்திற்கு ஆகி வருவது எது?

A) காரியாகுபெயர்

B) கருவியாகு பெயர்

C) உவமையாகு பெயர்

D) கருத்தாவாகு பெயர்



119. தங்கண் என்ற சொல் எவ்வகைப் பெயர் ?

A) தன்மைப் பெயர்

B) முன்னிலைப் பெயர்

C) படர்க்கைப் பெயர்

D) தொழிற்பெயர்



120. உம் என்னும் இடைச்சொல் எந்த பொருள் குறித்து வரும் ?

A) எதிர்மறை

B) சிறப்பு

C) எச்சம்

D) இவையனைத்தும்



121. கொல் என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது ?

A) பெயர்ச்சொல்

B) வினைச் சொல்

C) இடைச் சொல்

D) உரிச் சொல்



122. துய்ப்பேம் எனினே தப்புந பலவே - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு அறிக

A) உரிச்சொல் தொடர்

B) வினைத் தொகை

C) தன்மைப் பன்மை வினைமுற்று

D) பண்புத் தொகை



123. தன்மைப் பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது திரிவது தொடர்பான தவறான கூற்றினை கண்டறிக

A) யான் என்னும் பெயர் என் எனத் திரியும்

B) யாம் என்னும் பெயர் எம் எனத் திரியும்

C) நாம் என்னும் பெயர் நும் எனத் திரியும்

D) யாங்கள், நாங்கள் என்னும் பெயர் எங்கள் எனத் திரியும்



124. பொருந்தாத இணையை கண்டறிக

A) பெயர்ச்சோல் - மயிலம்

B) வினைச் சொல் - நடந்தான்

C) இடைச்சோல் - நட

D) உரிச்சொல் - சால



125. பொருத்துக

1. துயில் - அ) வினைத் திரிசொல்

2. கேணி - ஆ) பெயர்ச் திரிசொல்

3. புஷ்பம் - இ) திசைச் சொல்

4. விளி - ஈ) வடசொல்


1. 2. 3. 4.

A. அ இ ஆ ஈ

B. இ அ ஈ ஆ

C. ஆ இ ஈ அ

D. அ இ ஈ ஆ



126. எவ்வகை ஆகுபெயர் எனக் கண்டறிக - கம்பரைப் படித்தேன்

A) உவமையாகு பெயர்

B) காரியவாகு பெயர்

C) கருத்தாவாகு பெயர்

D) உவமையாகு பெயர்



127. பெட்டிக்குள் பணம் இருக்கிறது இத்தொடர் எந்த வேற்றுமை

A) ஏழாம் வேற்றுமை

B) இரண்டாம் வேற்றுமை

C) மூன்றாம் வேற்றுமை

D) நான்காம் வேற்றுமை



128. செய்திகளையும் கருத்துகளையும் பிறரிடம் கூறும்பொழுது, சுவைபடக் கூறுவதற்காக, ஒரே பொருள்தரும் இருசொற்களைப் பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது

A) எதிர்இணைச்சொற்கள்.

B) சிலேடை

C) நேர் இணைச்சொற்கள்

D) இவற்றில் எதுவுமில்லை



129. பொருந்தாத இணையைக் கண்டறிக ?

A) கோங்கு - மென்தொடர் குற்றியலுகரம்

B) குத்து - வன்தொடர் குற்றியலுகரம்

C) பாலாறு - நெடில்தொடர் குற்றியலுகரம்

D) கொய்பு - இடைத் தொடர் குற்றியலுகரம்



130. இலக்கணக் குறிப்பு தருக - திருக்குறள்.

A) அடையடுத்த காரியவாகுபெயர்

B) காரியவாகுபெயர்

C) அடையடுத்த கருவியாகுபெயர்

D) இவற்றில் எதுவுமில்லை



131. ஒற்றளபெடை சொல் வந்துள்ள தொடரைக் காண்க.

A) எஃஃகிலங்கிய கையரா யின்னுயிர்

B) உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்

C) உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

D) அழாஅல் தோழி அழுங்குவர் செலவே



132. என்னைப்பெற்ற தாயார் கோவில் - இது எவ்வகைப் பெயர்

A) காலப்பெயர்

B) இடப்பெயர்

C) பொருட்பெயர்

D) குணப்பெயர்



133. ஒருபொருட்பன்மொழி அல்லாத சொல் இவற்றில் எது

A) குற்றங்குறை

B) இரவுபகல்

C) ஏற்றத்தாழ்வு

D) கற்றோரும் மற்றோரும்



134. சரியற்ற கூற்று எது

A) எதிரிணைச் சொற்கள் அதனதன் எதிர்ச்சொற்களே.

B) நேரிணைச் சொற்கள் அனைத்தும் ஒருபொருட்பன்மொழியே

C) எதிரிணைச் சொற்கள் அனைத்தும் முரண்தொடைக்கு உரியனவே

D) இயைபுத் தொடைக்குரிய சொற்கள் அனைத்தும் ஒருபொருட்பன்மொழியே



135. வேற்றுமை எனப்படுவது

A) பெயரின் பொருளை வேறுபடுத்துவது

B) பெயரின் வினையை வேறுபடுத்துவது

C) பெயரையும் தொழிலையும் வெளிப்படையாகக் காட்டி வினையை வேறுபடுத்துவது

D) இவை அனைத்தும்.



136. முதல் வேற்றுமையில் எந்த சொல் முதல் சொல்லாக அமையும் ?

A) வினைச்சொல்

B) அடிச்சொல்

C) பெயர்ச்சொல்

D) இடைச்சொல்



137. உடன் என்ற உருபு எந்த வேற்றுமைக்கு உருபாக அமைகிறது ?

A) முதல் வேற்றுமை

B) இரண்டாம் வேற்றுமை

C) மூன்றாம் வேற்றுமை

D) நான்காம் வேற்றுமை



138. ஒன்றொழி பொதுச்சொல் அல்லாத தொடரைக் காண்க.

A) பசுமாடு பால் கறக்கிறது

B) வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்

C) நாட்டைக் காக்க ஐவர் போர்க்களம் சென்றனர்

D) இம்மாடு வயலில் உழுகிறது



139. பெயர்ச்சொல் சில மாற்றங்களுடன் அழைத்தற் பொருளில் வருவதனை எவ்வாறு அழைக்கலாம்

A) முதல் வேற்றுமை

B) வேற்றுமைத் தொகை

C) விளி வேற்றுமை

D) இவை அனைத்தும்



140. பண்டைய மன்னர்கள் தமிழ்----------- பாடுபட்டனர்.

A) வளர்ச்சியை

B) வளர்ச்சியின்கண்

C) வளர்ச்சிக்கு

D) வளர்ச்சிக்காக



141. இனமுள்ள அடைமொழியாக அமையாத சொல் எது?

A) கணக்குப் பாடநூல்

B) பாற்குடம்

C) உப்பளம்

D) ஊர்மன்றம்



142. ஐகாரம் மற்றும் ஔகாரத்திற்கு இன எழுத்துக்களாக அமைவது எது ?

A) இ, ஒ

B) உ, ஊ

C) இ, உ

D) உ, இ



143. பெயர்ச்சொல் அளபெடுத்து, வினையெச்சப் பொருளில் வரும் அளபெடை எது?

A) இன்னிசை அளபெடை

B) செய்யுளிசை அளபெடை

C) சொல்லிசை அளபெடை

D) ஒற்றளபெடை



144. பொருந்தாத சொல்லைக் கண்டறிக.

A) வாழ்ழ்க்கை

B) சங்ங்கு

C) நெஞ்ஞ்சு

D) கண்ண்



145. இனமுள்ள அடைமொழிக்குச் சான்று தருக.

A) செஞ்ஞாயிறு

B) கருங்காக்கை

C) செங்கதிரோன்

D) வெள்ளைப்பூனை



146. வினைமுற்று வினையைக் குறிக்காமல் வினை செய்தவரைக் குறிப்பதனை எவ்வாறு அழைக்கலாம் ?

A) வினையாலணையும் பெயர்

B) குறிப்பு வினைமுற்று

C) அன்மொழித் தொகை

D) தெரிநிலை வினைமுற்று



147. தொழிற்பெயர் விகுதிகளே இல்லாமல் பகுதி மட்டும் வந்து, தொழிலை உணர்த்துவது ?

A) முதனிலைத் தொழிற்பெயர்

B) வினையாலணையும் பெயர்

C) முதனிலை திரிந்த தொழிற்பெயர்

D) இவற்றில் எதுவுமில்லை.



148. ஒரு சொல்லில், முதலிலுள்ள எழுத்தோ இடையில் உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாது இருப்பின்அது எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A) உவமேயம்

B) உருவகம்

C) போலி

D) மங்கலம்



149. எதிர் இணைச்சொல் எது ?

A) ஈடுஇணையற்ற

B) குற்றங்குறை

C) ஓங்கியுயர்ந்த

D) அல்லும்பகலும்



150. அஞ்சு பழங்கள் வாங்கி வா - இத்தொடரில்

A) முதற்போலி சொல் இடம்பெற்றுள்ளது

B) கடைப்போலி சொல் இடம்பெற்றுள்ளது

C) முற்றுப்போலி சொல் இடம்பெற்றுள்ளது

D) இவற்றில் எதுவுமில்லை



151. பொருந்தாத இணையைக் கண்டறிக.

A. உபயம் - திருப்பணியாளர் கொடை

B. உஷார் - விழிப்பு

C. எதார்த்தம் - இயல்பு

D. ஐதிகம் - விருந்தோம்பல்



152. இருதயம் என்ற பிறமொழி சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் காண்க.

A) இதயம்

B) நெஞ்சகம்

C) ஆன்மா

D) நெஞ்சு



153. இவற்றில் எது வினைப் பகாப்பதம் ?

A) மண்

B) கல்

C) பொன்

D) நில்



154. ஒரு சொல்லை எத்தனை உறுப்புகளாக பிரிக்கலாம்

A) ஆறு

B) ஐந்து

C) சில நேரங்களில் மட்டும் ஏழு

D) மூன்று



155. ஒரு பகுபத சொல்லை குறைந்த பட்சம் எத்தனை உறுப்புகளாக பகுக்கலாம்

A) ஐந்து

B) நான்கு

C) மூன்று

D) இரண்டு



156. கீழுள்ளவற்றில் எழுத்துத்தொடர் மொழி எது?

A) பூ

B) கை

C) வீடு

D) தை



157. ‘சேவல்’ என்பதன் எதிர்ப் பால் பெயர் என்ன?

A) பேடு

B) குட்டி

C) கன்று

D) குருளை



158. உள், மேல், கீழ் என்பன எதன் வேற்றுமை உருபுகள்

A) நான்காம் வேற்றுமை

B) ஆறாம் வேற்றுமை

C) ஐந்தாம் வேற்றுமை

D) ஏழாம் வேற்றுமை



159. முரைசு, இலைஞ்சி என்ற சொற்கள் எதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

A) இறுதிப்போலி

B) முதற்போலி

C) முற்றுப்போலி

D) இடைப்போலி



160. ‘வேர்வை’ என்பதன் திருந்திய சொல்

A) வேற்வை

B) வேர்த்தல்

C) வியர்வை

D) வியற்வை



161. தோயும் வெண்டயிர் மத்தொலி துள்ளவும்

ஆய வெள்வளை வாய்விட் டரற்றவும்

தேயும் நுண்ணிடை சென்று வணங்கவும்

ஆய மங்கையர் அங்கை வருந்துவார் - இச்செய்யுளில் பயின்று வந்துள்ள அணி


A. இயல்பு நவிற்சியணி

B. உயர்வுநவிற்சியணி

C. இல்பொருள் உவமையணி

D. ஏகதேச உருவக அணி



162. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி

A) பூ

B) கோ

C) கா

D) ஆ



163. ‘வானை முட்டும் வைக்கோல்போர்’ என கூறுவது

A. இயல்பு நவிற்சியணி

B. உயர்வுநவிற்சியணி

C. இல்பொருள் உவமையணி

D. ஏகதேச உருவக அணி



164. இலக்கணக்குறிப்பு அறிக - உண்கலம்


A) பண்புத் தொகை

B) வேற்றுமைத் தொகை

C) விளித்தொடர்

D) வினைத் தொகை



165. காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் எது?

A) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

B) தெரிநிலை பெயரெச்சம்

C) வினைத் தொகை

D) குறிப்பு பெயரெச்சம்



166. ‘ஆகிய, ஆன’ என்னும் உருபுகளும் ‘மை’ விகுதியும் தொக்கி (மறைந்து) வருவது

A) பண்புத் தொகை

B) உவமைத் தொகை

C) உம்மைத் தொகை

D) இவற்றில் எதுவுமில்லை.



167. பொதுப்பெயருக்கும் சிறப்பு பெயருக்கும் இடையே ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வரும் தொகை எது

A) பண்புத் தொகை

B) உவமைத் தொகை

C) உம்மைத் தொகை

D) இருபெயரொட்டு பண்புத்தொகை



168. வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது ?

A) காரண பொதுப்பெயர்

B) இனமில்லா அடைமொழி

C) அடையடுத்த கருவியாகுபெயர்

D) அன்மொழித்தொகை



169. வளர்பிறை என்பது

A) பண்புத்தொகை

B) வினைத்தொகை

C) வேற்றுமைத்தொகை

D) அன்மொழித் தொகை



170. வெற்றிலை பாக்கு - என்ற சொல் எவ்வகைத் தொகைநிலைத்தொடர்

A) உம்மைத் தொகை

B) வினைத்தொகை

C) வேற்றுமைத்தொகை

D) அன்மொழித் தொகை



171. பொற்றொடி வந்தாள்- என்ற சொல் எவ்வகைத் தொகைநிலைத்தொடர்

A) உம்மைத் தொகை

B) வினைத்தொகை

C) வேற்றுமைத்தொகை

D) அன்மொழித் தொகை



172. மற்றொன்று - என்ற சொல் எவ்வகைத் தொகாநிலைத்தொடர்

A) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்.

B) இடைச்சொற்றொடர்.

C) வினையெச்சத்தொடர்.

D) வினைமுற்றுத்தொடர்.



173. எழுவாய்த்தொடர் எது

A) கபிலன் வந்தான்

B) கதிரவா வா!

C) கண்டேன் சீதையை

D) விழுந்த மரம்



174. கூடிப் பேசினர் என்னும் தொடர் -------- ஆகும்.

A) வினைமுற்றுத்தொடர்

B) பெயரெச்சத்தொடர்

C) வினையெச்சத்தொடர்

D) உரிச்சொற்றொடர்



175. பிழையற்ற சொற்றொடரைக் காண்க.

A) ஓர் மாவட்டம்

B) அவரது மகனோடு

C) கண்டதனைக் கூறவே

D) கண்டதை கூறவே



176. இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன எந்த வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்

A) மூன்றாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) இரண்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



177. அ என்பது எந்த வேற்றுமைக்குரிய உருபு

A) ஆறாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) இரண்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



178. "முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

A) தொல்காப்பியம்

B) தண்டியலங்காரம்

C) பன்னிருபாட்டியல்

D) நன்னூல்



179. இடுகுறி சிறப்புப் பெயர் எது ?

A) வயல்

B) வாழை

C) மீன்கொத்தி

D) பறவை



180. சரியற்ற கூற்று எது

A) அடுக்குத்தொடரை பிரித்தால் பொருள்தரும்.

B) அடுக்குத்தொடர் இரண்டு, மூன்று, நான்கு முறையும்கூட அடுக்கிவரும்.

C) அடுக்குத்தொடர் அடைமொழியாய்க் குறிப்புப்பொருளில் வரும்.

D) அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய

பொருள் காரணமாக வரும்.



181. சரியான இணையை கண்டறிக

A. பெருமழை பெய்தமையால் மரங்கள் வீழ்ந்தன.

B. வயலில் ஆட்டுக்கன்று மேடீநுகிறது.

C. பசு குட்டி போட்டது.

D. மாட்டை இலாயத்தில் கட்டு.



182. செயப்படுபொருள் வேற்றுமை என்று அழைக்கப்படுவது எது

A) மூன்றாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) இரண்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



183. பொருட்டு, நிமித்தம் என்பன சொல்லுருபுகள் எந்த வேற்றுமை உருபுக்கு மாற்றாக வரும்

A) ஐ

B) ஆல்

C) கு

D) இன்



184. தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப்பொருள்களாக வேறுபடுத்தும் வேற்றுமை உருபு எது

A) மூன்றாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) இரண்டாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



185. இல் என்னும் வேற்றுமை உருபு எந்த வேற்றுமையில் இடப்பொருளில் வரும்

A) ஆறாம் வேற்றுமை

B) நான்காம் வேற்றுமை

C) ஏழாம் வேற்றுமை

D) ஐந்தாம் வேற்றுமை



186. இராமனுக்குத் தம்பி இலக்குவன். இதிலுள்ள வேற்றுமை உருபு -----பொருளில் வந்துள்ளது.

A) முறை

B) கொடை

C) பகை

D) நட்பு



187. வீட்டுக்கு ஒரு பிள்ளை. இதிலுள்ள வேற்றுமை உருபு ------- பொருளில் வந்துள்ளது.

A) முறை

B) கொடை

C) பகை

D) தகுதி



188. கூலிக்கு வேலை. இதிலுள்ள வேற்றுமை உருபு ------- பொருளில் வந்துள்ளது.

A) முறை

B) பொருட்டு

C) பகை

D) தகுதி



189. வளையலுக்குப் பொன். இதிலுள்ள வேற்றுமை உருபு ------- பொருளில் வந்துள்ளது.

A) முறை

B) பொருட்டு

C) பகை

D) அதுவாதல்



190. புலவர்க்குப் பரிசு கொடுத்தார். இதிலுள்ள வேற்றுமை உருபு ------- பொருளில் வந்துள்ளது.

A) முறை

B) கொடை

C) பகை

D) தகுதி



191. அறிவில்மிக்கவர் ஔவை. இதிலுள்ள வேற்றுமை உருபு ------- பொருளில் வந்துள்ளது.

A) ஏது

B) எல்லை

C) ஒப்பு

D) நீங்கல்



192. ஆறாம் வேற்றுமைக்கு சொல்லுருபாக வருவது

A) கீழே

B) உடைய

C) இடம்

D) மேல்



193. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதுவே பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தருவது ?

A) சொல்பின்வரு நிலையணி

B) செம்மொழிச் சிலேடை

C) பொருள்பின்வரு நிலையணி

D) பிரிமொழிச் சிலேடை



194. தொல்காப்பியரின் கருத்துப்படி இயற்கை விளக்கமாக அமைந்த காட்டலாகாப் பொருள் எது/எவை ?

A) அருள்

B) அன்பு

C) புகழ்

D) இவையனைத்தும்



195. எற்பாடு என்ற சொல்லில் பாடு என்பது எதனைக் குறிக்கும் ?

A) சூரியன்

B) மறையும் நேரம்

C) இசை

D) மாலை



196. ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிமைறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் இடப்படுவது ?

A) அரைப்புள்ளி

B) காற்புள்ளி

C) முக்காற்புள்ளி

D) முற்றுப்புள்ளி



197. எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது/இருப்பவை ?

A) நாக்கு மற்றும் பல்

B) அண்ணம்

C) ஒலியணுக்கள்

D) A மற்றும் B



198. பாடலின் சொற்கள் முன்பின் மாறாது நேரே சென்று பொருள்கொள்வது?

A) கொண்டுகூட்டு பொருள்கோள்

B) மொழிமாற்றுப்பொருள்கோள்

C) நிரல்நிறைப் பொருள்கோள்

D) ஆற்றுநீர்ப்பொருள்கோள்



199. எந்த வழுக்கள் வழுவமைதியாக எற்றுக்கொள்ளப்படும்?

A) திணை வழு, கால வழு, இட வழு

B) கால வழு, பால் வழு, இட வழு

C) பால்வழு, இட வழு, திணை வழு

D) திணை வழு, பால் வழு, கால வழு



200. செய்யுளின் நடுவில் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்தி பொருளைத் தருவது ?

A) பூட்டுவிற் பொருள்கோள்

B) மொழிமாற்று பொருள்கோள்

C) கொண்டுகூட்டு பொருள்கோள்

D) இவற்றில் எதுவுமில்லை

DOWNLOAD PDF FILES - LINKS

S.No

Subject

Download links

1.   

INDEX (all question Papers downloads)

Download

2.   

சார்பெழுத்துகள்

Download

3.   

வினைச்சொல்

Download

4.   

சொல் இலக்கணம்

Download

5.   

தொகைநிலைத் தொடர்

Download

6.   

தொகாநிலைத் தொடர்

Download

7.   

தமிழ் இலக்கணம் – வழக்கு

Download

8.   

அணி இலக்கணம்

Download

9.   

வல்லினம் மிகும் - மிகா இடங்கள்

Download







thirutnpsc.blogspot.com

தொண்டுக்கு முந்து, தலைமைக்கு பிந்து

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post